அம்மைக்கொரு தாலாட்டு

என்னை உறக்குவதற்கு நீ ஒருகாலத்தில் பாடிய கண்ணீர் பாட்டையும் கடன்பெறுகிறேன் நான். இன்று நான் தாலாட்டுப் பாடுகிறேன்;ளூ உறங்கு என் தாயே, இனி அல்லலில்லை, முக்தையாகிவிட்டாய்! பிறவி கடன், குருதிப்பால் கடன், நாவில் நின் விரல் பொன்தேனைத் தடவிய கணத்தில் பூத்த சங்கீதமும் அம்மா என்ற சொல்முதல் மின்னித் தெளிந்த படிமங்களும் கடன். மீளாக் கடனுக்குக் கணக்கு வைக்காமல் கவனித்தாய் என்னைநீ அந்திம நாள்வரை. ஏதும் பதிலுக்குத் தர இயலவில்லை உன் தங்கமகன் பாடி நடந்தான் சஞ்சாரியாய்….

மரத்தின் பாடல்

நிலையற்று அலைந்து திரிபவனே, வந்துவிட்டாயோ மீண்டும் நிழல்தேடி அபயம் வேண்டி பேராசை உறையும் கண்களால்? நீண்ட வழியெங்கும் வெப்பம் கொதிக்கின்ற தீக்கனல் புழுக்கம் வந்து நீ அருகில் வந்துவிட்டாயோ? சோர்வுற்றுத் தளர்ந்த வழிப்போக்கர்களுக்கு இறுதிக் கவிதைபோல் சாந்தத்தை நல்கும் இந்த நிழல்களில் இழைந்துஎன் பாதபதுமங்களில் தலைசாய்த்து உறங்கியும் உணர்வு நுழைவாயிலில் இருளை ஊடுருவியும் நடந்த உன் மூதாதையர்கள். அவர்கள் உன் நினைவுகளில் பாக்கி நிற்கும்போதும் அடர்ந்த இலைகள் உதிர்ந்து வரண்ட கிளைகள் இதயம் பிளந்து, நீர் சொரியும்